Friday 5 December 2014

பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 10ம்வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதவேண்டும் என
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

          தமிழகத்தில் 10, பிளஸ் 2 என்ற கல்விமுறை 1978-79ல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. 1986-87 வரை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு. அதன்படியே சேர்க்கை நடந்தது. 1987ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி( எண் 906) 1987-88 முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2 என நிர்ணயம் செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் டிப்ளமோ, பட்டம், முதுகலைப்பட்டங்களை பெற்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கருத்துருவை ஏற்க இயலாது என பள்ளிக்கல்வித்துறையால் 2011 அக்.,25 ல் தெரிவிக்கப்பட்டது. இதனால் 2011 ,2012 ம்ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்றவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்குகளில் 10ம் வகுப்பிற்கு பின் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவ்வாறு ஆணை பிறப்பித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "10ம்வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1987 ஜூலைக்கு முன் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ்2க்கு இணையாக கருதி முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன் நகல் அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து பின்னர் துறை முடிவு செய்யும்,”என்றார்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

10ம் வகுப்பு அட்டவணை:
தேர்வு நேரம்: காலை 9.15 மணி - மதியம் 12 மணி வரை

மார்ச் 19 : தமிழ் முதல் தாள்
மார்ச் 24: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 25: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 : கணிதம்
ஏப்ரல் 6: அறிவியல்
ஏப்ரல் 10 : சமூக அறிவியல்.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேர்வு நேரம் : காலை 10.00 மணி - மதியம் 1.15 மணி வரை
மார்ச் 5: பகுதி ž1 தமிழ் தாள் 1
மார்ச் 6:பகுதி 1 தமிழ் தாள் 2


மார்ச் 9: பகுதி 2 ஆங்கிலம் தாள் 1
மார்ச் 10: பகுதி 2 ஆங்கிலம் தாள் 2
மார்ச் 13: உயிரி வேதியியல், சிறப்பு மொழி தாள்.
மார்ச் 16 : புவியியல், மணையியல் அறிவியல்,புவியியல்
மார்ச் 18: கணிதம்,
மார்ச் 20: அரசியல் அறிவியல், நர்சிங் புள்ளியியல்,
மார்ச் 23 : வேதியியல், கணக்குப்பதிவியல்,
மார்ச் 27: இயற்பியல், பொருளாதாரம்

மார்ச் 31: உயிரியியல் வரலாறு , தாவரவியில், வணி்கக்கணக்கு

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல்  அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.

         தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர  வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும்  வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.  ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

கணினிப் பயிற்றுநர்கள் நியமிக்க டிஆர்பி அறிவிப்பு: ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இடைக்கால விதிகளின்படி கணினிப் பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



மதுரையைச் சேர்ந்த எஸ்.ஷோபனா, எல்.தீபால் ஆகியோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதன் விவரம்:

தமிழக பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியில் தொழிற்பாடப் பிரிவாக கணினி அறிவியல் பாடம் 1984-85-இல் அறிமுகம் செய்யப்பட்டது. இப் பாடப் பிரிவுகளுக்கு கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித் துறையால் இடைக்கால விதிகள் கொண்டுவரப்பட்டன. நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கணினி அறிவியல் பாடத்தை இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைப் போல பிரதானப் பாடமாக 2004-இல் தமிழக அரசு கொண்டு வந்தது.

அதேநேரம், கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய சிறப்பு விதிகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர்கள் இன்னும் கணினி பயிற்றுநர்கள் என்று தான் அழைக்கப்படுகின்றனர்.

மேலும், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சிறப்பு விதிகளின் அடிப்படையில், குறைவான கல்வித் தகுதி உடையவர்களே நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கை, மேற்படி பணிக்குத் தகுதியுடையவர்களின் உரிமைகளை மறுப்பதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது.

கணினி பயிற்றுநர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகக் கருத வேண்டும். மேலும், அந்தப் பணியிடத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.

ஆகவே, இடைக்கால விதிகளின்படி, கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால், இதற்குப் பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிந்து வகுப்புக்கு செல்லவேண்டும் : பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பேச்சு

ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடை அணிந்து வகுப்புக்கு செல்லவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உதவி கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் தெரிவித்தார்.

அமைச்சர் கே.சி.வீரமணி
தமிழ்நாட்டில் உள்ள உதவி கல்வி அதிகாரிகளுக்கு நிர்வாக பயிற்சி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் 02/12/2014 அன்று நடைபெற்றது. முதல் கட்டமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த உதவி கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பயிற்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் உதவி கல்வி அதிகாரிகளுக்கான கையேட்டை வெளியிட்டுபேசியதாவது:-மாணவர்கள் 8-வது வகுப்பு வரை ஒழுக்கமாக இருந்தால் தான் அவர்கள் உயர்கல்வி படிக்கும்போதும், பின்னர் வாழ்க்கையிலும் ஒழுக்கமாக வாழ்வார்கள். எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியவர்கள் மாணவர்கள்தான்.அவர் களை உருவாக்குவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் வகுப்பறையில் உள்ள மாணவர்களை தமது குழந்தைகளாக பாவிக்கவேண்டும்.இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
முதன்மை செயலாளர் த.சபீதா
பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பேசியதாவது:-பள்ளிகளின் தரம் உயர வேண்டும், கல்வித்தரம் உயரவேண்டும் ஆகிய இரண்டையும் குறிக்கோள்களாக முதல்-அமைச்சர் கொண்டுள்ளார். கல்வித்துறையில் தமிழகம் சர்வதேச அளவில் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்று நினைத்து, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.அதன் தொடர்ச்சியாக எந்த ஒரு மாணவரும் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு தடை ஏற்படக்கூடாது என்று எண்ணி, பாடப்புத்தகம் முதல் மடிக்கணினி வரை 14 வகையான விலை இல்லா பொருட்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்க உத்தரவிட்டார். அதன்படி அந்த 14 வகையானபொருட்களும் விலை இல்லாமல் பள்ளிக்கூடம் திறக்கும் நாள் அன்றே வழங்கப்படுகிறது. அதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது.உள் கட்டமைப்பு வசதிபள்ளி கல்வித்துறைக்கு மட்டும் ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் கட்டமைப்பு வசதிக்கு மட்டும் ரூ.2ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உதவி கல்வி அதிகாரிகளுக்கு பொறுப்பு நிறைய உள்ளது. நீங்கள் பொறுப்பாக உங்கள் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும். அதனால் மற்ற ஊழியர்களும் அலுவலகத்திற்கு வருவார்கள்.அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்து அரசின் விலை இல்லா திட்டங்கள் போய்ச்சேர்ந்துள்ளதா? என்று சோதனை செய்ய வேண்டும். மாணவர்கள் எந்தபாடத்தில் பலவீனமாக இருக்கிறார்கள் என்று பார்த்து அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களை கல்வி கற்பிக்கவைக்க வேண்டும். பலவீனமான மாணவர்களுக்கு அந்த பாடத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். 100 சதவீத தேர்ச்சியை மாணவர்கள் அனைவரும் அடைய ஆசிரியர்கள் வழிசெய்ய வேண்டும். அதை உதவி கல்வி அதிகாரிகள் கண்காணித்து ஏற்பாடுசெய்ய வேண்டும். மாநில கல்வி வாரியம் அல்லாத சி.பி.எஸ்.இ. உள்ளிட்டஅனைத்து வாரிய பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணியமான முறையில் உடை
ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் மட்டும் போதாது, கண்ணியமான முறையில் உடை அணிந்து வகுப்புகளுக்குச் செல்லவேண்டும். அவர்களை பார்த்துதான்மாணவர்கள் நடப்பார்கள். அதனால் ஆசிரியர்கள் எப்படி கண்ணியமாக நடக்கவேண்டுமோ அப்படி நடக்க வேண்டும். அத்தகைய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.இவ்வாறு த.சபீதா பேசினார்.
பூஜா குல்கர்னி
முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உள்பட பலர் பேசினார்கள்.இணை இயக்குனர்கள் கருப்பசாமி, தர்ம.ராஜேந்திரன், கார்மேகம், பழனிச்சாமி, லதா, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடக்கத்தில் தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வரவேற்றார்.

Wednesday 26 November 2014

வலைதள பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்

Tuesday 11 November 2014

Flash News: ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 6 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்- தேர்வாகி பணியில் உள்ளவர்களையும் இறுதித்தீர்ப்பு கட்டுபடுத்தும்.

நீதிமன்றம் புதிய உத்தரவு

GO 71 மற்றும் GO 25 ஆகியவற்றை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தனர் இதில்  67 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு 6 வாரகாலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் இறுதி தீர்ப்பை பொறுத்து பணிநியமனங்கள் அமையவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சரிப்புக்கான இணையதளம்

        ஒவ்வொரு மொழியிலும், எந்த வார்த்தையை, எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்ட ஒரு இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

 
        இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 6 மொழிகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 11 மொழிகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 6 மொழிகள், 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 25 மொழிகள், 500க்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 46 மொழிகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஒலிப்புகள் (Pronounce) எனும் தலைப்பில் சொடுக்கினால் கிடைக்கும் பக்கத்தில் மொழி எனும் தலைப்பில் நாம் மொழியைத் தேர்வு செய்தால் வார்த்தைகளின் பட்டியல் கிடைக்கிறது.
ஆண்,பெண் குரல்
அனைத்து வார்த்தைகளின் உச்சரிப்புகளையும் கேட்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண் குரல், பெண் குரல் எனும் இரு வழியிலான வசதிகளும் உள்ளன. ஆங்கிலம் போன்ற பல நாடுகளின் பயன்பாட்டிலுள்ள மொழிகளுக்குச் சில நாடுகளின் வாரியான உச்சரிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தத் தளத்தில் இடம் பெற்றிருக்கும் சில வார்த்தைகளுக்கு உச்சரிப்பு வசதி இல்லாத நிலையில் அதைப் பதிவேற்றம் செய்வதற்கான வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஏற்கனவே இடம் பெற்றிருக்கும் வார்த்தை உச்சரிப்பைப் போல் நாம் புதிய உச்சரிப்பைப் பதிவேற்றம் செய்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மொழியும்
இங்கு ஒவ்வொரு மொழியிலும் புதிய வார்த்தைகளையும், அதற்கான உச்சரிப்புகளையும் பதிவேற்றம் செய்ய முடியும்.
இங்கு, தமிழ் மொழியில் இதுவரை 1925 வார்த்தைகள் பதிவேற்றம் செய்யப் பெற்றிருக்கின்றன. இவற்றில் 387 வார்த்தைகளுக்கு உச்சரிப்புப் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கிறது. தமிழ் மொழியில் ஆர்வமுடையவர்கள் தமிழ் வார்த்தைகளை இங்குப் பதிவேற்றம் செய்யலாம். தமிழ் மொழியைச் சரியாக உச்சரிக்கும் நல்ல குரல் வளமுடையவர்கள் தங்களுடைய குரலில் உச்சரிப்புகளைப் பதிவேற்றம் செய்யலாம்.
இத்தளத்தில் அனைத்து மொழியிலான வார்த்தை உச்சரிப்புகளையும் கேட்க விரும்பினாலும், தங்கள் மொழி தொடர்புடைய வார்த்தை உச்சரிப்புகளைப் பதிவேற்றம் செய்ய விரும்பினாலும் பயனராகப் (User) பதிவுசெய்துகொள்ள வேண்டும். இலவசமாய்ப் பதிவுசெய்து பல்வேறு மொழிகளிலான சரியான வார்த்தை உச்சரிப்பைக் கேட்டு நாமும் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கலாம்.
உலக மொழிகளின் சரியான வார்த்தை உச்சரிப்புக்கு வழிகாட்டும் இந்தத் தளத்திற்குச் செல்ல http://www.forvo.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

பெற்றோரைப் பிரிந்து படிக்கிற பிள்ளைகள்... பிரச்னைகள்..

       ‘ஹாஸ்டல்ல போட்டாத்தான் உனக்கெல்லாம் புத்தி தெளியும். பெத்தவங்க அருமையும் தெரியும்... கொஞ்ச நாள் எங்களைவிட்டுப் பிரிஞ்சிருந்தாதான் நீ சரிப்படுவே...’ என மிரட்டுகிற பெற்றோரை வீட்டுக்கு வீடு பார்க்கலாம். அப்படிச் சொல்கிற பெற்றோரில் எத்தனை பேர் உண்மையிலேயே பிள்ளைகளை விடுதியில் சேர்க்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

 
         ஆனாலும் கால ஓட்டத்தில் மேல்படிப்புக்காக பிள்ளைகளை விடுதியில் தங்க வைத்துப் படிக்க வைக்கிற கட்டாயம் இன்று அனேகம் பெற்றோருக்கு ஏற்படவே செய்கிறது. உடன் இருக்கும் வரை பிள்ளைகளின் நச்சரிப்பையும் இம்சைகளையும் சகித்துக் கொள்ள முடியாமல் தவிக்கிற பெற்றோருக்குமே, திடீரென பிள்ளைகளைப் பிரிந்திருப்பதென்பது புதிய அனுபவமாகவே அமைகிறது. பெற்றோருக்கு மட்டுமின்றி, பிள்ளைகளுக்கும் அதே நிலைமைதான்...
இந்தச் சூழலில்தான் ‘ஹோம் சிக்னஸ்’ எனப்படுகிற வீட்டேக்கம் (Home sickness) அவர்களைப் பாடாகப் படுத்துகிறது. ஆனால், இதை உடனடியாக பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வீட்டேக்கம் என்பது வீட்டை விட்டுப் பிரிந்துள்ளவர்களிடம் அல்லது பிரியப்போகிறவர்களிடம் உண்டாகும் இடர்பாடு மற்றும் அவலநிலையைக் குறிக்கும். வீடு, வீட்டிலுள்ள நபர்கள், வீட்டுச் சாப்பாடு, வீட்டுக்குத் திரும்புதல் என வீட்டைப் பற்றிய, வீட்டைச் சூழ்ந்த அத்தனை நினைவுகளும் உண்டாக்கும் ஒருவித மன வேதனைதான் வீட்டேக்கம்.
வீட்டேக்கம் என்பது வாழ்ந்த, பழகிய வீட்டையும் சூழலையும் விட்டு புதிய இடத்துக்கு மாறுகிற எல்லோருக்கும் உண்டாகும். அதில் ஆண், பெண் பேதமோ, யாரை, எவ்வளவு பாதிக்கும் என்கிற அளவுகோலோ இல்லை. 20 சதவிகித ஆண் / பெண் பிள்ளைகள், வீட்டை விட்டு விலகிச் சென்று படிக்கிற போது, கொஞ்சம் கடுமையான வீட்டேக்கத்தை அனுபவிக்கிறார்கள். 6 முதல் 9 சதவிகிதக் குழந்தைகளுக்கு, வீட்டேக்கமானது இன்னும் கொஞ்சம் தீவிரமாகவே இருக்கிறது.
வீட்டேக்கத்தால் பாதிக்கப்படுகிற பிள்ளைகளில் 80 சதவிகிதம் பேர், ஆரம்பத்திலிருந்து, மறுபடி வீடு திரும்புகிற வரை ஒரே அளவிலான மன வருத்தத்தை அனுபவிக்கிறார்கள். 20 சதவிகிதம் பேர், சற்றே அதிகமான பாதிப்பை உணர்கிறார்கள். அது வீட்டை விட்டு வெளியேறிய முதல் சில வாரங்களில் இன்னும் அதிகரிக்கிறது. மறுபடி வீட்டுக்குத் திரும்பு வதற்கு சில நாட்கள் முன்புதான் அது குறையவே தொடங்குகிறது.
வீட்டேக்கத்துடன், உடல்நலமின்மை, படிப்பில் சந்திக்கிற சிரமங்கள், கவன மறதி, தன்னம்பிக்கையின்மை, நடத்தைக் கோளாறு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். அதுவே தீவிர வீட்டேக்கத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, மனச்சஞ்சலம் மற்றும் படபடப்புடன் தனக்கு உதவ யாருமே இல்லை என்கிற உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளலாம். சில பிள்ளைகளிடம் அது சண்டை, சச்சரவு, தவறான வாய்ப்பேச்சு, அழிவுச்செயல் போன்றவையாக வெளிப்படலாம். வீட்டேக்கம் உண்டாகாமல் தடுக்க அனுபவம், ஆளுமை, குடும்பம் மற்றும் மனப்பாங்கு உதவும்.
ஏற்கனவே வீட்டாரை விட்டு மிகக் குறுகிய காலம் பிரிந்த அனுபவம் உள்ள டீன் ஏஜ் பிள்ளைகளையும், அந்த அனுபவமே இல்லாத பிள்ளைகளையும் மிகவும் இள வயதுப் பிள்ளைகளையும் வீட்டேக்கம் சட்டென பாதிக்கலாம். இதில் வயது முக்கியம் அல்ல. அனுபவம்தான் இந்த விஷயத்தில் மிக முக்கியமான காரணி. 8 வயதுக் குழந்தையாக இருக்கலாம். அவனு(ளு)க்கு அடிக்கடி வீட்டாரை விட்டுப் பிரிந்திருந்த அனுபவம் இருந்தால், படிப்புக்காக வெளியே தங்க வேண்டி வரும் போது வீட்டேக்கம் உண்டாகும் வாய்ப்புகள் குறைவு. 16 வயதுப் பிள்ளையாக இருக்கலாம். வீட்டை விட்டு விலகியிருந்த அனுபவமே இருக்காது. அந்தக் குழந்தைக்கு வீட்டேக்கம் உண்டாக வாய்ப்பு அதிகம். புதிய சூழல் உருவாக்கும் எதிர்மறையான அனுபவங்களும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஏமாற்றங்களும் இவ்வகை வீட்டேக்கம் வரக் காரணங்கள்.
பெற்றோருடன் நிலையற்ற பிணைப்பு மற்றும் இருமனப்போக்குடைய பந்தம் கொண்ட குடும்பத்தில் வாழும் பிள்ளைகள் குடும்பத்தை விட்டுப் பிரியும் போது அதிகமாக பிரிவினைப் பதற்றத்துக்கு ஆளாவார்கள். தனது பிரிவினை உணர்வுகளை வெளிப்படுத்தினால் அதை பெற்றோர் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்கிற உறுதியற்ற மனநிலையில் இருப்பார்கள் இந்தப் பிள்ளைகள். மற்றவர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் தான் தகுதியானவர்தானா என்கிற குழப்பமும் இருக்கும். இந்த உறுதியற்ற தன்மையின் விளைவாக, ஹாஸ்டல் வார்டன் அல்லது ஆசிரியர்களுடனான புதிய சூழல் அதிகபட்ச வேதனையை உண்டாக்கும். மாறாக பெற்றோருடன் நிலையான பிணைப்புள்ள பிள்ளைகள் சுதந்திரமாக, புதிய சூழலை அனுபவிக்கத் துணிவதுடன் புதிய உறவுகளில் ஈடுபடும் ஆர்வமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தீர்மானக் கையாளுதல் அதிகமாக உள்ள பிள்ளைகள் வீட்டேக்கத்தை குறைவாக உணர்வார்கள். வீட்டை விட்டு வெளியேறும் முடிவு பிள்ளையின்மேல் திணிக்கப்பட்டால் அந்தப் பிள்ளை அந்தத் தீர்மானத்தைக் கையாள்வதைக் குறைவாக உணரும். இதன் விளைவாக அந்தப் பிள்ளை பிரிவினையை வேதனையாக அனுபவிக்கும்.
தமக்குள் உண்டாகும் பிரிவினை பதற்றத்தை வெளிப்படையாக காட்டும் பெற்றோரும், பிரிவினையைப் பற்றி இருமனப் போக்குடைய பெற்றோரும் (நீ போய் சந்தோஷமா இரு... நான்தான் உன்னை நெனைச்சுக்கிட்டே இருப்பேன் என்றெல்லாம் வசனம் பேசும் பெற்றோர்), பிரிந்து போகும் பிள்ளைகளிடம் அதிக வீட்டேக்கத்தை உண்டு பண்ணுவர்.
வெளியில் தங்கிப் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்கு சில டிப்ஸ்...
* வீட்டைவிட்டு வெளியே தங்கப் போகும் நேரம் குறித்த விஷயத்தில் உங்கள் பிள்ளைகளின் முடிவையும் கேளுங்கள். அதைத் தவிர்த்து, பிள்ளைகளைக் கட்டாயத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியே அனுப்பினால், அது அவர்களது வீட்டேக்கத்தை அதிகப்படுத்தும். பிரிவதற்கு முன்பே, அதைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள். ‘வெளியில தங்கிப் படிக்கிற எல்லாரும், ஏதோ ஒரு வகையில சில விஷயங்களை மிஸ் பண்ணித்தான் ஆகணும். ஹோம் சிக் எல்லாம் சகஜமான விஷயம்... அதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா, வீட்டு ஞாபகம் இருந்ததுன்னா, உன்னால இன்னும் நிறைய விஷயங்களை யோசிக்க, செயல்படுத்த முடியும்’ என்று உங்கள் பிள்ளைக்குச் சொல்லுங்கள்.
* உங்கள் பிள்ளைகளிடமிருந்து விலகி இருக்கும் நேரம் மிகக் குறுகியது என நினைத்துக் கொள்ளுங்கள். விலகி இருக்கும் பிள்ளைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதைத் தவிருங்கள். விலகி இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்குத் தகவல் தொடர்பின் அவசியத்தைப் புரிய வையுங்கள். கடிதங்கள் எழுத ஊக்கப்படுத்துங்கள். இதை முன்கூட்டியே திட்டமிட்டு, தபால் தலை ஒட்டி, முகவரி எழுதிய அஞ்சல் உறைகளையும் நினைத்தவற்றை எழுத ஒரு நோட்டையும் கொடுத்தனுப்பலாம்.
* உங்கள் பிள்ளைகளுடன் இணைந்து, அவர்களது புதிய சூழலைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுங்கள். முன்கூட்டியே அதைத் தெரிந்து கொள்ளும் போது, பிள்ளைகள் புதிய இடத்துக்குச் செல்லும் போது ஏற்படக்கூடிய அந்நியத்தன்மை குறையும். இணையதளங்கள், குறிப்பேடுகள், ஏற்கனவே அந்த இடத்தில் இருப்பவர்கள், முன்னாள் மாணவர்கள், அங்கே வேலை பார்ப்பவர்கள் என பல தரப்பினரிடமிருந்தும் இதற்கான தகவல்களைப் பெறலாம்.
* புதிய சூழலில் யாரேனும் ஒருவராவது உங்கள் பிள்ளைக்கு அறிமுகமாக உதவுங்கள். அந்த நபர், உங்கள் பிள்ளையைவிட வயதில் பெரியவராகவோ, சக மாணவராகவோ இருக்கலாம். அப்படியொருவருடனான அறிமுகம், உங்கள் பிள்ளையின் வீட்டேக்க உணர்வைக் குறைத்து, தனக்கு ஒரு துணை இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தும்.
* புதிய நபர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளவும், நம்பிக்கையான, தன்னைவிட வயதில் பெரியவர்களின் உதவியைப் பெறவும் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். புதிய இடத்து இறுக்கத்தைக் குறைக்க இதெல்லாம் உதவும்.
* உங்களுக்குள் உண்டாகும் பிரிவினை பதற்றத்தை வெளிப்படையாக காட்டும்படியோ, பிரிவினையைப்பற்றி இருமனப்போக்குடனோ பேசுவதை தவிருங்கள். ‘சாப்பாடு நல்லாருக்கும்னு நினைக்கிறேன்...’, ‘உனக்கொண்ணும் பிரச்னை இருக்காதுன்னு நினைக்கிறேன்...’, ‘ஹேவ் எ வொண்டர்ஃபுல் டைம். உன்னோட செல்ல நாய்க்குட்டிக்கு சாப்பாடு கொடுக்க நான் மறக்காம இருக்கணும்’... இப்படி எதையாவது நினைத்து வருத்தப்படவும், வீட்டை நினைத்துக் கொள்ளவும் வாய்ப்பளிக்கிற இது போன்ற விஷயங்களைப் பிள்ளைகளிடம் பேச வேண்டாம். பிள்ளைகளைப் பிரிந்திருப்பதன் துயரத்தை, பெற்றோர், சக பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளலாமே தவிர, பிள்ளைகளிடமே பகிர்ந்து கொள்ள வேண்டாம். மாறாக, புதிய இடத்தில் உங்கள் குழந்தைக்குக் கிடைக்கவிருக்கிற வேடிக்கையான அனுபவங்களைப் பற்றிப் பிள்ளைகளிடம் பாசிட்டிவாக பேசலாம்.
‘உனக்கு அங்கே இருக்கப் பிடிக்கலைன்னா சொல்லு... நான் வந்து கூட்டிட்டுப் போயிடறேன்’ என எந்த வாக்குறுதிகளையும் கொடுக்காதீர்கள். அப்படிச் சொன்னால், புதிய சூழலுக்கேற்ப தன்னைப் பழக்கிக் கொள்ளும் முயற்சியை சிதைத்து, நம்பிக்கையையும் கெடுக்கும். ‘எங்கம்மாவும், அப்பாவும் இங்க இருக்கப் பிடிக்கலைன்னா, வந்து கூட்டிக்கிறேன்’னு சொல்லிருக்காங்க என்று சொல்வதால், உங்கள் பிள்ளையைப் பார்த்துக் கொள்கிறவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கும் தேவையற்ற சிரமங்கள் உண்டாகலாம். அது உங்களுக்குமே ஒருவித தர்மசங்கடத்தைக் கொடுக்கும். வாக்கு கொடுத்து விட்ட காரணத்துக்காகவே உங்கள் பிள்ளையை நீங்கள் அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
அப்படிச் செய்யாத பட்சத்தில் உங்கள் வார்த்தைகளின் மீதான நம்பிக்கை, அவர்களுக்குக் குறையும். அதற்கு பதில், ‘எனக்கு வீட்டு நினைப்பு வந்தா என்ன பண்றது?’ என்கிற உங்கள் பிள்ளையிடம், ‘அப்படி வர்றது சகஜம்தான். ஆனா அதுலேருந்து மீள என்ன செய்யணும்னு கத்துக்கோ. அங்கே உன்னைப் பார்த்துக்க நிறைய ஆட்கள் இருப்பாங்க. எதுவானாலும் அவங்கக்கிட்ட சொல்லலாம். உனக்கு நிச்சயம் புது இடம் பிடிக்கும்’ என நம்பிக்கை தரலாம்.
பிரிவுக்கான பயிற்சியை முன்கூட்டியே தொடங்கலாம். வார இறுதியில், உங்கள் பிள்ளைகளை நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் தங்க அனுமதிக்கலாம். அந்த 2 - 3 நாட்களுக்கு உங்கள் இருவருக்குமிடையே தொலைபேசி பேச்சுகூட இருக்கக் கூடாது. ஆனால், கடிதம் எழுதியனுப்பும் பயிற்சியை வலியுறுத்தலாம். மறுபடி உங்கள் பிள்ளை வீட்டுக்கு வந்ததும், பிரிந்திருந்த நாட்கள் எப்படியிருந்தன என்பதையும் அந்தப் பிரிவை சமாளிக்க உதவிய விஷயங்களையும் பற்றிப் பேசலாம்

PG-TRB : முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்: ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது

அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.


அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு
செய்யப்படுகின்றனர்.

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு என்பது பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வில் இருந்து வேறுபட்டது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால்தான் ‘பாஸ்’ செய்ய முடியும். போட்டித் தேர்வுகளில் அதுபோல கிடையாது. காலியிடங் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பெண் வரிசைப்படி ஆட்களை தேர்வு செய்வார்கள். அந்த கட்ஆப் மதிப்பெண் என்பது தேர்வுக்குத் தேர்வு மாறக் கூடியது.

இந்நிலையில், தற்போது முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பாஸ் மார்க் எவ்வளவு?

அதன்படி, பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 50% மதிப்பெண், எஸ்சி வகுப்பினர் 45% மதிப்பெண், எஸ்டி வகுப்பினர் 40% மதிப்பெண் எடுத்தாக வேண்டும். இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’ செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். ‘பாஸ்’ செய்தவர்கள் எண்ணிக்கை குறை வாக இருந்தால், எஞ்சிய பணி யிடங்கள் காலியாகவே வைக்கப் படும். ‘ஃபெயில்’ ஆனவர்களைக் கொண்டு அந்த இடங்கள் நிரப்பப் படாது. இதுபோன்ற ‘பாஸ்’ மதிப் பெண் முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு களில் (30 சதவீதம்) பின்பற்றப் படுவது குறிப்பிடத்தக்கது.

எதற்காக இந்த மாற்றம்?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி விரிவுரை யாளர்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் ஆள் இல்லாத காரணத்தால், மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த தேர்வு நியமனம் ரத்துசெய்யப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் குறிப்பிட்ட சில பிரிவுகளி லும், இதேபோல தமிழ்வழி இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்யவேண்டி இருந்தது. எனவே, தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 10-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 26-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரி அலுவலகங்களில் வழங்கப் படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத் தேர்வில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது.

TNTET :சுப்ரீம் கோர்ட்டில் GO 71 and GO 25எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

              சுப்ரீம் கோர்ட்டில் இன்று GO 71 and GO 25எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும்.

 
          சலுகை சம்பந்தமாக இருவேறுபட்ட தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் உள்ளதால் அரசு தொடந்து எந்த பணிநியமனமும் இனி செய்யமுடியாது. எனவே அரசு அப்பீலுக்கு இங்கு வரும்போது அவ்வழக்கும் இத்துடன் சேர்த்துவிசாரிக்கப்படும்.ஏற்கனவே தேர்வாகி பணியில் உள்ளவர்களையும் இறுதித்தீர்ப்பு கட்டுபடுத்தும்.

Supreme court case appeared. Lawyer msg.

Full detailed:

SLP no.29245 of 2014 etc cases filed by Lavanya and others challenging the order of 2nd bench of Madras High court(AgnihotriJ & MMSJ) DT 22.09.2014 reg GO 71 dt 30.05.2014 awarding of weightage marks and GO 29 DT 14.02.2014 for 5% relaxation for selection to the post of BT Assistant and Secondary grade Teacher.Honble Supreme Court Bench comprising Mr. Ibrahim KalifullaJ and Mr. Abhay Manohar SapreJ admitted SLP and ordered notice to the respondents returnable by four weeks; further granted Interim Orders that all appointments already made will be subject to result of SLP. When requested to stop future appointments, Honble Supreme Court orally observed that there are two different orders passed by Honble High Court of Madras and therefore State Govt would be more aggrieved and State Govt may file SLP.

Thanks To,
Mr.Vijaya Kumar Chennai

அருந்ததியருக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கூடாது : ஐகோர்ட்டில், மனு தாக்கல்

          தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பாதிப்பு

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சரவணகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழக அரசு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த சட்டத்தினால், பெரும்பான்மையானவர்களான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அருந்ததியர் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அரசுப் பணிகளில் சேர முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கவேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

விழிப்புணர்வு இல்லை

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பி கடந்த அக்டோபர் 27-ந் தேதி உத்தரவிட்டார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வலசை ரவிசந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அருந்ததியர் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளேன். தாழ்த்தப்பட்ட பிரிவில், அருந்ததியர் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், எங்கள் மக்களிடம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு விவரங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால், இந்த சலுகைகள் எல்லாம் பிற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சென்று விடுகிறது.

கொத்தடிமை

இதனால், எங்கள் மக்கள் துப்புரவு தொழிலாளியாகவும், கொத்தடிமை தொழிலாளியாகவும், செருப்பு தைக்கும் தொழிலாளியாகவும் உள்ளனர். இதனால், அரசு பணி நியமனத்திலும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2009-ம் ஆண்டு தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அந்த சட்டத்திருத்தத்தை இந்த ஐகோர்ட்டு ரத்து செய்தாலோ, தடை விதித்தாலோ அது எங்கள் சமுதாய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, என்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

புத்தகத்துக்கு குட்பை - கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம

         கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.


       நகரபுறங்களில் மட்டுமே இருந்த இக்கலாச்சாரம், தற்போது ஊரக பகுதியிலும் வேரூன்றி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 173 கன்னட பள்ளிகளை மூடிவிட அரசு முடிவு செய்தது. இதற்கு பல தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பள்ளிகளை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
          இந்நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் 'புத்தகம் இல்லாமல் கல்வி' என்ற பெயரில் தேசிய எழுத்தறிவு இயக்கம் மற்றும் கர்நாடக கல்வி இயக்குனரகம் இணைந்து செயல்படுத்த முடிவு செய்தது. அதன்படி மைசூரு மாவட்டம், உன்சூர் தாலுகா, மூதூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக மடிகணினி வழங்கப்பட்டுள்ளது.
அதை நாற்காலி மீது வைத்து ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்கிறார்கள். மூதூர் கிராமத்தில் தொடங்கியுள்ள இத்திட்டத்தை விரைவில் சில கிராமங்களில் செயல்படுத்த கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது 'கணினி பாடம்' என்ற பெயரில் புதிய பாட திட்டத்தை பெலகாவி மாவட்டத்தில் கல்வி இயக்குனரகம் தொடங்கியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள வடகாவி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் இத்திட்டத்திற்காக டிஜி ஸ்கூல் கம்ப்யூட்டர் சர்வர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் இரண்டாமாண்டு பி.யு.சி. வரையிலான பாடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி அறையில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் டி.வி.டி. மூலம் பாடம் ஒளிபரப்பு செய்யப்படும். ஓவியங்களுடன் இருக்கும் பாடத்தை ஆசிரியர் விளக்கினால், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்துவதின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய வழியில் கல்வி கற்பிப்பதுடன், ஆசிரியர்களின் சுமையும் குறைகிறது. மேலும் பாடத்தில் எத்தனை முறை சந்தேகம் வந்தாலும், அதை அடிக்கடி டி.வி.டி. மூலம் போட்டு தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். எதிர்க்காலத்தில் டி.வி.டியை தனிதனியாக மாணவர்களுக்கு வழங்கும் யோசனையும் கல்வி இயக்குனரகத்திற்கு இருப்பதாக தெரியவருகிறது.
முதல் கட்டமாக பெலகாவியில் தொடங்கியுள்ள �கணினி பாட திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் ஏற்பாடு நடந்து வருகிறது. உலகில் 18 நாடுகளில் இக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய கல்வி உலகில் கணினி உதவியுடன் கல்வி வழங்குவது அவசியமான ஒன்று என்பது கல்வியாளர்களின் கருத்தாகவுள்ளது.

PGTRB- விண்ணப்பம் விற்பனை தொடங்கியது: 2¾ லட்சம் விற்கும் என்று எதிர்பார்ப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1,807 பேர் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். தேர்வுக்கான விண்ணப்பம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.


சென்னையில் நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. முதுகலை பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் வந்து விண்ணப்ப படிவத்தை வரிசையில் நின்று பெற்றுச்சென்றனர். இந்தபடிவம் 26-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. அன்றுதான் பூர்த்தி செய்த படிவத்தை சமர்ப்பிக்கவும் கடைசி நாள்.
இந்த படிவம் 2 லட்சத்து 75 ஆயிரம் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு வருகிற ஜனவரி மாதம் 10-ந்தேதி நடைபெறுகிறது.

Thursday 6 November 2014

மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை


மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை என, சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தெரிவித்தார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழில் புத்தகப் பண்பாடு என்ற தலைப்பிலான பன்னாட்டு அரங்கின் 2-ம் நாள் அமர்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் எம்.தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.
இதில், நாவலாசிரியர் ஜோ டி குரூஸ் மேலும் பேசியதாவது: எழுத்தாளர்கள் தாங்கள் எதிர்கொண்ட உண்மை நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார்கள். தங்கள் காலத்து நிகழ்வுகளை, தற்கால நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி வெளிக்கொணரும்போது நல்ல வரவேற்பு கிடைக்கும். வாசிக்கும் திறன் முன்பைவிட அதிகரித்திருந்தாலும், மாணவர்களிடம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதற்கு மாணவர்களைக் குறை கூறுவதிலோ, எழுத்தாளர்கள், பதிப்பகத்தார்களை குறை கூறுவதிலோ அர்த்தமில்லை. பெரும்பாலான கல்லூரிகளில் பேராசிரியர்களும், பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டிய கடமையைச் செய்யத் தவறுவதே அடிப்படைக் காரணம். மாணவர்களிடம் வாசிக்கும் திறனை வளர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை என்றார்.
எழுத்தாளர் தொ.பரமசிவன் பேசியது: பாரதியார் இறக்கும் தருவாயில் தன்னுடைய படைப்புகளை எல்லாம் புத்தகங்களாக வெளியிட ரூ.40 ஆயிரம் தேவைப்படுவதாகவும், இதற்காக தனது படைப்புகளை எட்டணாவுக்கு விற்பதாகவும் கூறினார். அத்தோடு ரூ.100 பங்களிப்பு செய்பவர்களுக்கு தன்னுடைய கடிதத்துடன், படைப்புகளையும் அனுப்பி வைப்பதாக அறிவித்தார். அந்தளவுக்கு மகாகவியான அவரது படைப்புகளை புத்தகங்களாகக் கொண்டு வருவதற்கு பெரிதும் சிரமப்பட்டார்.
அந்தக் காலத்தில் புத்தகத்தை வெளியிடுவது என்றால் மிகவும் சிரமம். ஆனால், இன்றைக்கு புத்தகங்களை வெளியிட ஏராளமான பதிப்பகத்தார்கள் இருக்கின்றனர். புத்தகங்கள் இன்றைக்கு சமூக மாற்றத்தை உருவாக்கியுள்ளன. ஆனாலும், ஜாதிய ரீதியான சமூக சூழல்தான் இருக்கிறது. இந்த நிலை மாறி, தனி மனித உரிமையைப் போற்றக்கூடிய சமுதாய நிலை உருவாக புத்தகக் கலாசாரத்தின் மூலமே முடியும்.
சமீப காலமாக தமிழ் கலாசார ரீதியான தேடுதல்கள் மாணவர்களின் ஆய்வுகளில் குறைந்துள்ளன. இது மாற வேண்டும் என்றார்.
புத்தகப் பண்பாடும் இலக்கியமும் என்ற தலைப்பில் நடைபெற்ற உரையாடலை சுகுமாரன் ஒருங்கிணைத்தார். எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் பேசுகையில், புத்தகத்துக்கும், தமிழ் மொழிக்கும் நெடிய வரலாறு உண்டு. புத்தகங்களையும் மக்களையும் இணைப்பது நூலகங்கள். புத்தகங்களும், நூலகங்களும் பொக்கிஷம். அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
சிறுகதை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பேசுகையில், நவீன இலக்கியத்துக்குள் செல்வதற்கு இன்றைய இளம் எழுத்தாளர்கள் அச்சப்படுகின்றனர். ஒரு சிறுகதை படித்தாலே போதும். அதைப் பலரிடம் பகிர்ந்து கொள்ளும்போது எழுத்தாற்றல் தானாக வந்துவிடும் என்றார்.
கவிஞர் சக்தி ஜோதி பேசுகையில், முன்பெல்லாம் பெண்கள் நூலகங்களுக்கு நேரடியாகச் செல்லும் பழக்கம் இல்லை. இன்றைக்கு இதில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், பெண்கள் எழுதினால் எதிர்ப்புகள் வருகின்றன. இவற்றை எல்லாம் எதிர் கொண்டு எழுதுவதற்கு பெண்கள் திரள வேண்டும், என்றார்.

"வாசிப்பே வாழ்க்கையைச் சுவாசிப்பதன் அடையாளம்'


புத்தகங்களை வாசிப்பதே வாழ்க்கையைச் சுவாசிப்பதன் அடையாளம் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் நடத்தும் மதுரை புத்தக திருவிழாவில் சனிக்கிழமை "வாசித்தலே சுவாசித்தல்' எனும் தலைப்பில் அவர் பேசியது:
உலகமே நம்மை விட்டு விலகினாலும், நண்பர்கள் கைவிட்டாலும், தனிமைச் சிறையில் அடைத்து வைத்தாலும் நம்மை விட்டு விலகாத உறவாக இருப்பவை புத்தகங்களே. புத்தகங்களைப் படைப்பவர்கள் மற்றவர்களுக்காக தங்களை வருத்திக் கொள்கிறார்கள். அடுத்தவர் துன்பத்தை தனது துன்பமாகப் பாவிப்பவர்கள்.
அடுத்தவர் மேன்மைக்காகப் பாடுபடுபவர்கள். உலகில் தாங்கள் அனுபவித்த இன்ப துன்பங்களை மற்றவர்களுக்காகப் பகிர்ந்து கொள்பவர்கள். மனித குல மேன்மைக்காக தங்களை அர்ப்பணிப்பவர்கள் படைப்பாளிகள்.
உலகின் மிகச் சிறந்த புத்தகங்களை படைத்தவர்கள் ஆண்டுக்கணக்கில் ஆராய்ச்சி செய்தவர்கள். மறைமலை அடிகள் வாழ்க்கையை வரலாறாகப் படைக்க 24 ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரத்தை ஓலைச்சுவடிகள் மூலம் சேகரிக்க உ.வே.சாமிநாதய்யர் கடும் முயற்சி மேற்கொண்டார். இதுபோன்று பல அறிவுஜீவிகள் தங்கள் சுய வாழ்வை மறந்து புத்தகங்களை உருவாக்கிய வரலாறுகள் உண்டு. உலகில் எத்தனை நூல்கள் வெளிவந்தாலும், அவை மக்கள் மத்தியில் எந்த வகையில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதில்தான் அதன் சிறப்பு தெரியும். புத்தகம் படிப்பதையே வாசிப்பாகக் கொண்ட தலைவர்கள் ஏராளம்.
சோவியத் யூனியனை வடிவமைத்த சிற்பி லெனின் மக்களிடம் முதற்கடமையாக வலியுறுத்தியது படியுங்கள் என்பதைத்தான். தூக்குத் தண்டனைக்காகக் காத்திருந்த போதும் பகத்சிங் வாசித்தது லெனின் புத்தகத்தையே. அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்ய இருந்தபோது ஒரு புத்தகத்தை வாசித்து முடிப்பதற்காக சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டவர் பேரறிஞர் அண்ணா.
உலகில் புத்தகங்கள் செய்த புரட்சிகளும் ஏராளம். ஆங்கிலேயக் காலனி ஆட்சியின் பிடியில் இருந்த அமெரிக்கர்களை பகுத்தறிவு என்ற புத்தகம்தான் சுதந்திர தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் கறுப்பர்கள் இன விடுதலைக்கு வித்திட்டதும் புத்தகம்தான்.
வறுமையில் வாடியபோதும் கவிதைக்காக புத்தக மூட்டைகளைப் பரிசாக வாங்கி வந்து குவித்தவன் பாரதி. புத்தகங்கள் வெறும் தகவல் தொகுப்பாக மட்டும் இருந்தால் இணையதளங்களில் படித்துவிடலாம். எனது வாழ்க்கையே எனது செய்தி என துணிவுடன் கூறியவர் மகாத்மா காந்தியடிகள். அதுபோன்ற வாழ்க்கை பாடத்தை உலகுக்கு அளிப்பதாக புத்தகங்கள் இருக்க வேண்டும். அத்தகைய புத்தகங்களை வாசிப்பதையே வாழ்க்கையாகக் கொள்ள வேண்டும். வாசிப்புக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாத வாழ்க்க்கை முறை தேவை. புத்தகங்களை வாசிப்பதே உலக வாழ்வில் சுவாசிப்பதற்கான அடையாளமாகும் என்றார்.
நிகழ்ச்சியில், முனைவர் சுந்தரஆவுடையப்பன், சர்வோதய இலக்கியப் பண்ணைத் தலைவர் மா.பாதமுத்து, மணிமுத்தாறு சிறப்புக் காவல் படை அதிகாரி ஆர்.சின்னசாமி ஆகியோரும் பேசினர். பபாசியின் முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்றார். பபாசி செயற்குழு உறுப்பினர் பத்ரி சேஷாத்ரி நன்றி கூறினார்.

ஒரே நாளில் 20 ஆசிரியர்கள் லீவு: விடுமுறை விடப்பட்ட அரசுப் பள்ளி




      சிவகாசி: ஒரே நாளில் 20 ஆசிரியர்கள் விடுப்பு எடுத்ததால், திருத்தங்கல் அரசு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இப்படி செயல்பட்டால் விருதுநகர் மாவட்டம் எப்படி நூறு சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவது? என பெற்றோர்கள் புலம்புகின்றனர்.
கல்வியை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பலகோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், பள்ளி உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்த தீவிரம் காட்டப்படுகிறது.
அரசு எவ்வளவுதான் முயற்சிகள் செய்தாலும் ஆசிரியர்கள் முழு ஈடுபாடு பணியாற்றினால்தான் அரசின் நோக்கம் நிறைவேறும். விருதுநகர் மாவட்டம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 25 ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்று வந்தது. கடந்த ஆண்டுகளில் இந்த தேர்ச்சி சதவீதம் குறைந்து முதலிடத்தை தக்க வைக்க முடியாமல் போனது. பொது தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகாரிகளும் தொடர் முயற்சி மேற்கொள்கின்றனர்.
ஆனாலும் எதிர்பார்த்த தேர்ச்சி சதவீதத்தை அரசு பள்ளிகளால் இன்னும் எட்ட முடிவதில்லை. அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் தங்களின் தேர்ச்சி சதவீதத்தை தக்க வைக்க பொது தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி வருகின்றன. சில தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் கூட 10, பிளஸ் 2 மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர்.
உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இதுபோல் செயல்படும் நிலையில் திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பாடு வித்தியாசமாகவும், வேதனையாகவும் உள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் ஒரே நாளில் 20பேர் விடுப்பு எடுத்ததால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வராததால் விடுமுறை விடப்பட்டுள்ள தகவல் பெற்றோர்களை வேதனை அடைய செய்துள்ளது.
இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை 800 மாணவர்கள் படிக்கின்றனர். 27 வகுப்புகள் செயல்படுகின்றன. இங்கு ஆசிரியர் பணியிடம் 44ல் எட்டு பணியிடங்கள் காலியாக உள்ளன. 36 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் நேற்று 20 பேர் விடுப்பு எடுத்ததால் பாடம் நடத்த முடியாது, மாணவர்களையும் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதை காரணம் காட்டி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது, பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாளில் 20 பேர் விடுப்பு எடுத்தாலும் பள்ளிக்கே விடுமுறை விடப்படும் சூழ்நிலை என்பது மோசமானது. இப்படி அரசு பள்ளிக்கு விடுமுறை விட்டால், எப்படி விருதுநகர் மாவட்டம் நம்பர் 1 தேர்ச்சி இலக்கை எட்ட முடியும்.
ஆசிரியர் தரப்பில் கூறுகையில், "இந்த ஆண்டிற்கான விடுப்புகளை நேற்றுக்குள் எடுக்காவிட்டால் விடுப்பு நாள் காலாவதியாகி விடும் என்பதால், ஒரே நாளில் இப்படி விடுமுறை எடுத்து கொண்டனர்" என்றனர்.
திருத்தங்கல் மைக்கேல், "ஆசிரியர்கள் லீவு எடுத்ததற்காக பள்ளிக்கு விடுமுறை என்பது வேதனை அளிக்கிறது. அரசு பள்ளிகளில் இதுபோன்ற செயல்பாடுகளால்தான் பொது தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. 20 ஆசிரியர்களுக்கு மேல் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கியது யார்? இப்படி இருந்தால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்" என்றார்.
தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம், "ஆசிரியர்கள் அதிகளவில் லீவு எடுத்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை நாளை (சனிக்கிழமை) மாற்று வேளை நாளாக செயல்படுத்த உள்ளோம். ஆசிரியர்கள் விடுமுறை தகவலை கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவித்துவிட்டேன்" என்றார்.

TET Paper 1:8ம் தேதி சிறுபான்மை ஆசிரியர் நியமன கவுன்சலிங்

          தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது  ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

         இதற்கான கவுன்சலிங் 8ம் தேதி இணைய தளம் மூலம் நடக்கிறது. எனவே சிறுபான்மை மொழிவழி இடைநிலை ஆசிரியர் பணிக்காக டிஆர்பி தெரிவு செய்துள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள முகவரி உள்ள மாவட்டத்தில்  உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் 8ம் தேதி காலை 9 மணிக்கு ஆஜராகவேண்டும். அப்போது தங்களின் அசல் கல்விச் சான்றுகள், அதன் நகல்கள் தலா 2 எடுத்து  செல்ல வேண்டும்.

PG TRB தேர்வு பாடவாரியாக காலிப்பணியிடம் அறிவிப்பு

தேர்வு நாள் : 10.01.2015
விண்ணப்பிக்க கடைசி நாள் :26.11.2014
விண்ணப்ப விநியோகம் தொடக்கம் :10.11.2014
விண்ணப்ப கட்டணம் :ரூபாய் .50
பாட வாரியாக காலிப்பணியிட விவரம்
Tamil. -277
English -209
Maths -222
Physics -189
Chemistry -189
Botany -95
Zoology -89
History -198
Economics -177
Commerce -135
Phy.Director Gr.I -27.
Total- 1807.

உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள்!

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.

• கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.

• உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

• 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன்.


• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் "காதல் இளவரசன்" - ஜெமினி கணேசன், "புரட்சி மன்னன்" - கே. பாலச்சந்தர், "சூப்பர் ஆக்டர்" - பஞ்சு அருணாசலம், "கலைஞானி" - டாக்டர் கலைஞர், "உலக நாயகன்" - கே.எஸ். ரவிக்குமார்.

• The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட)

• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

• டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ).

• மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.

• கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 • ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)

  1. • கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது.


    • அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.

    • கமலுக்கு தனது பிறந்தநாளான நவம்பர் 7ஐ கொண்டாடுவதில் ஒரு சங்கடம் உண்டு. ஏனெனில் இதே தேதியில்தான் அவரது தந்தையார் மறைந்தார்.

    • இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27.

    • டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது.

    • உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்.

    • இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான்.

    • தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்.

    • ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்"

    • கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான்.

    • ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது.

    • சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன்.

    • கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

    • கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல்.

    • தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.
' உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! 
 
Thanks Mr. Vasanth Girija

Tuesday 4 November 2014

FLASH NEWS: TNTET நவம்பர் 10 க்குள் புதிய ஆசிரியர் பட்டியல் வெளியாகிறது?

  நவம்பர் 10 ம் தேதிக்குள் இரண்டாவது ஆசிரியர் நியமன பட்டியல் வெளியாகிறது. இந்த பட்டியலில் 90 க்கு மேல் பெற்றவர்களை கொண்டு நிரப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் கூறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 90 க்கு மேல் பெற்ற தேர்வர்களை கொண்டு இந்த ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுகிறது. இவை 2500 பணியிடங்கள் வரை இருக்கலாம் பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பணி உயர்வு பெற்ற
ஆசிரியர்களால் ஏற்பட்ட காலி பணியிடம் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை எனவே 2500 வரை மட்டுமே இந்த பணியிடங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவற்றில்  5%  மதிப்பெண் தளர்வு எதிர்பார்ப்பது கடினம்.  தமிழுக்கு அதிக பணியிடம் வேண்டி பலர் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளதால் தமிழுக்கு பணியிடங்கள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது இருப்பினும் இவை உறுதியாக கூறமுடியாது. இந்த பயியிடங்கள் எண்ணிக்கை 2500 தோராயமானதே.இவை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் மட்டுமே. மேலும் நவம்பர் 10 ம் தேதிக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படபடுகிறது. ஆனால் அந்த தேதியை தாண்டவும் வாய்ப்பு உள்ளது. காத்திருந்து பார்ப்போம்.

தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, இன்று (4ஆம் தேதி) மதுரை வந்த தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, ''அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல், இந்த ஆண்டு 1,800 முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.

முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய சிறப்பு எழுத்து தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு 150 மார்க்குகளும், வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டிக்கு 4 மார்க்குகளும், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் அனுபவத்திற்கு 3 மார்க்குகளும் வழங்கப்படும். மொத்தத்தில் 157 மார்க்குகளை அடிப்படையாக கொண்டு முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்'' என்றார்.

Saturday 1 November 2014

5 முறைக்கு மேல் ஏ.டி.எம்., பயன்படுத்தினால் கட்டணம் !

ஏ.டி.எம்., ஐ மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் இன்று  முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 நகரங்களில் நாளை முதல் இது அமல்படுத்தப்படுகிறது.கணக்கு வைத்துள்ள வங்கியாக இருந்தாலும் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்.

வங்கிக்கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் 3 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.ஏ.டி.எம். கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கும் முறை இன்று  (நவ 1ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும், பணம் இருப்பை அறிவிதற்கும் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வருகின்றனர். கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இந்த ஏ.டி.எம். கார்டை எத்தனை முறை பயன்படுத்தினாலும் கட்டணம் ஏதும் இதுவரை வசூலிக்கப்படாமல் இருந்தது. மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இனிமேல் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.களிலும் 5 முறை மட்டுமே ஏ.டி.எம்.கார்டை இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.

இந்த விதிமுறை பணம் எடுப்பதற்கு மட்டுமின்றி, பணம் இருப்பு குறித்து அறிவதற்கும் பொருந்தும். 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.இந்த விதிமுறை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 பெருநகரங்களில் இன்று (நவ.1ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

அண்ணாமலைப் பல்கலை தமிழியல்துறையில் மாணவர் நல மையம் திறப்பு

                   
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் இந்திய மொழிப்புலத்திற்கான மாணவர் நல மையத் திறப்பு விழா நடைபெற்றது.
இந்திய மொழிப்புல முதல்வர் பேராசிரியர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். தமிழியல் துறைத் தலைவர் முனைவர் ப.ஞானம் வரவேற்றார். தமிழகஅரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா மாணவர் நல மையத்தை திறந்து வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுவதை குறிப்பிட்டார். விழாவில் பதிவாளர் ந.பஞ்சநதம், கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், அறிவியல் புல முதல்வர் முனைவர் சபேசன், இந்தித்துறை தலைவர் ஜெகநாதரெட்டி, மொழியியல் மைய இயக்குநர் முனைவர் ச.ராஜா, மொழிப்புல மாணவர் நல மைய அலுவலர் முனைவர் அரங்க.பாரி, கலைப்புல மாணவர் நல மைய அலுவலர் ரவி, அறிவியல் புல மாணவர் நல மைய அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

கருத்தரங்க காட்சிப்பேழை திறப்பு விழா:
தமிழியல் துறையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கருத்தரங்கம், பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. 2003 ஆண்டு முதல் 2014- ஆண்டு வரை நடைபெற்ற கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை நூலாக தொகுக்கப் பெற்று 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளாக பல்கலைக்கழகம் வெளிக்கொண்டு வந்துள்ளன. இக்கருத்தரங்கு ஆய்வுக்கோவைகளின் காட்சிப்பேழை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. தமிழியல்துறைத் தலைவர் முனைவர் ப.ஞானம் தலைமை வகித்தார். பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா காட்சிப்பேழையினை திறந்து வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் இதுபோன்ற காட்சிப்பேழைகளை அனைத்து புலத்திலும் நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். விழாவில் பதிவாளர் ந.பஞ்சநதம், மொழிப்புல முதன்மையர் வி.திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

கணினி ஆசிரியர் பதிவு முப்பு பட்டியலில் குளறுபடி சரி செய்யுமா? வேலை வாய்ப்பு அலுவலகங்கள்

           பல மாவட்டங்களில் கணினி பயிற்றுநர் பணிக்கான பதிவினை சரிபார்க்க பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கணினி பாடம் பயிலாதவர்களையும் (வரலாறு வணிகவியல் கணிதம் மற்றும் பல பாடங்கள்) கணினி பயிற்றுநர் பணிக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 
              இதனால் முறையாக பி.எஸ்.சி. கணினி அறிவியல் மற்றும் பி.எட்  படித்தவர்கள் பாதிக்கப்படுவதோடு முறையான இடத்தில் தான் நாம் இருக்கிறோமா என்ற குழப்பம் ஏற்படும். மேலும் பி.எட் படித்த ஆண்டிற்கு பதிலாக பி.எஸ்,சி படித்த ஆண்டினை பதிவு காலமாக குறிப்பிட்டுள்ளனர் இந்த குறைபாடுகளை மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர் சரி செய்வதாக வாய்டிமாழியாக  என்று உறுதி கூறியுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக வேலைக்காக காத்து இருக்கும் வேலை இல்லா பட்டதாரி கணினி ஆசிரியர்கள் பயன் அடையும் வகையில் வேலை வாய்ப்பு அலுவலர்கள் சரி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்

தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test)

National Eligibility Test | நெட் தேர்வு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (Teacher Eligibility Test-TET) தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால்
“ஸ்லெட்” (State Level Eligibility Test) அல்லது “நெட்” (National Eligibility Test) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஸ்லெட் தேர்வில் வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் மட்டுமே பணிபுரிய முடியும். ஆனால், நெட் தேர்ச்சி பெறுவோர் தமிழகம் உள்பட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேரும் தகுதியைப் பெறுவார்கள். பி.எச்டி. பட்டம் பெற்றிருந்தால் நெட், ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை. தேசிய அளவிலான “நெட்” தகுதித்தேர்வு ஆண்டுக்கு இரண்டு தடவை அதாவது ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் வரையிலும் நெட் தேர்வினைப் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)தான் நடத்தி வந்தது. வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வில் இருந்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இத்தேர்வை நடத்தவுள்ளது. 
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் நெட் தேர்வெழுதலாம். (அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கான நெட் தகுதித்தேர்வு சிஎஸ்ஐஆர் மூலம் தனியே நடத்தப்படுகிறது). முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), மாற்றுத்திறனாளிகள் எனில் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. முதுகலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்போரும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நெட் தேர்வில் உதவி பேராசிரியர் தகுதிக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், ஜெஆர்எப் எனப்படும் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் தகுதிக்கு வயது வரம்பு 28 ஆகும். இதில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை அளிக்கப்படுகிறது. 
நெட் தேர்வு, 3 துணைத் தேர்வுகளை உள்ளடக்கியது ஆகும். மூன்று தேர்வுகளுமே அப்ஜெக்டிவ் முறையிலானதுதான். முதல் தேர்வில் விண்ணப்பதாரரின் ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மீதான ஆர்வத்தைச் சோதிக்கும் வகையில் 60 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் பிடித்தமான ஏதேனும் 50 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். 2-வது தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 50 கேள்விகள் கேட்டிருப்பார்கள். 3-வது தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 75 வினாக்கள் இடம்பெற்றிருக்கும். முதல் இரு தேர்வுகளுக்கும் தலா ஒன்றே கால் மணி நேரம், மதிப்பெண்ணும் தலா 100. மூன்றாவது தேர்வுக்கு இரண்டரை மணி நேரம் வழங்கப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள். ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டியது முக்கியம். 
இந்த ஆண்டுக்கான 2-வது நெட் தகுதித்தேர்வு டிசம்பர் மாதம் 28-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பினைச் சிபிஎஸ்இ வெளியிட்டிருக்கிறது. தகுதியுடைய முதுகலை பட்டதாரிகள் www.cbsenet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு குறிப்பிட்ட தேர்வுக்கட்டணத்தை ஆன்லைனில் அல்லது வங்கிச் செலான் மூலம் குறிப்பிட்ட வங்கியில் செலுத்த வேண்டும். அதன் பின்பு பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைத் தாங்கள் தேர்வுசெய்யும் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர தகுதிகளை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் - நவம்பர் 15 
தேர்வுக் கட்டணத்தை வங்கி செலான் மூலம் செலுத்த கடைசித் தேதி - நவம்பர் 18 
ஆன்லைன் விண்ணப்பம், தேர்வு நுழைவுச் சீட்டை பிரிண்ட் அவுட் செய்ய கடைசி நாள் நவம்பர் 25 

248 பேருக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

2014-2015-ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஏற்கெனவே காலியாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 248 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
நடத்தப்பட்டது. கலந்தாய்வின்போது தங்களுக்கு விருப்பமான இடங்களைத் தேர்வுசெய்த ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.